தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது!!
தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46) என்பவர் நேற்று (07.12.2025) இரவு கோவிலை பூட்டிசென்று இன்று காலை வந்து திறந்து பார்க்கும்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இசக்கிபாண்டி இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார் (19) என்பவர் மேற்படி கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10,000 பணத்தையும் மீட்டனர்.