ராணுவ வீரர் எனக் கூறி வியாபாரியிடம் நூதன மோசடி : தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடைக்காரரிடம் வாட்ஸ் அப் மூலம் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் என்ற பெயரில் கூகுள் பேயில் ரூபாய் 65 ஆயிரம் நூதன முறையில் மோசடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பர்னிச்சர் கடைக்காரர் புகார் அளித்துள்ளார்.
ராணுவ வீரர் எனக் கூறி கோவில்பட்டி வியாபாரியிடம் நூதன முறையில் ரூ. 65 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடைக்காரரிடம் வாட்ஸ் அப் மூலம் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் என்ற பெயரில் கூகுள் பேயில் ரூபாய் 65 ஆயிரம் நூதன முறையில் மோசடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பர்னிச்சர் கடைக்காரர் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கார்த்திகேயனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாஹில் குமார் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ராணுவ வீரர் உடையுடன் இருந்த நபர் தனக்கு பர்னிச்சர் சாமான்கள் வேண்டும் எனவும், சாத்தூரில் உள்ள அவரது உறவினருக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டும், உங்களது கடையை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கார்த்திகேயன், ராணுவ வீரரான சாஹில் குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் பல்வேறு மாடல்களை அனுப்பி உள்ளார். இதை தொடர்ந்து கார்த்திகேயனிடம் மீண்டும் whatsapp மூலம் தொடர்பு கொண்ட சாஹில் குமார் தனக்கு பிடித்த மாடலை தேர்வு செய்து பின்னர் அதற்கான மொத்த விலையில் முதலில் 65,000 கூகுள் பேய் மூலம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் கூகுள் ஸ்கேனரை அவருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயன் அனுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் whatsapp மூலம் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட சாஹில் குமார் நான் ராணுவத்தில் இருப்பதால் தங்களுக்கு நிறுவன அக்கவுண்டில் பணம் செலுத்த முடியாது எனவே வேறு கூகுள் ப்ளே கொண்ட வங்கி கணக்கை தாருங்கள் அதன் மூலம் பணம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் தனது மகன் வங்கி கணக்கு எண்ணை சாஹில் குமாருக்கு அனுப்பி உள்ளார். இதில் இரண்டு தடவை ஒரு ரூபாய் ,ஒரு ரூபாய் போட்டு சாஹில் குமார் அடுத்த கட்டமாக தான் ரூபாய் 65 ஆயிரம் அனுப்புவதாக கூறியுள்ளார். பின்னர் கூகுள் பேவின் மூலம் 65 ஆயிரம் ருபாய்க்கான லிங்க் அனுப்பி கார்த்திகேயன் மகன் அக்கவண்டில் இருந்து உடனே 65,000 எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சாயில் குமாரை தொடர்பு கொண்டு எங்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து உள்ளீர்கள் என கேட்டதற்கு எனக்கு google pay மூலம் ரூ.500 போடுங்கள் உங்களுக்கு உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
பின்னர் அதனைத் தொடர்ந்து 35 ஆயிரம் 18 ஆயிரம் அனுப்புகிறேன் என மீண்டும் அதே போல் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார் . பின்னர் சுதாரித்துக் கொண்ட கார்த்திகேயன் மோசடியாக தனது மகன் வங்கி கணக்கில் இருந்து ஷாகில் குமார் நூதன முறையில் பயணத்தை திருடியதை தெரிந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் குற்றப்பிரிவு காவல் துறையில் மோசடி நபர் சாயில் குமார் குறித்து ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். கூகுள் பேயில் ரெக்வெஸ்ட் கொடுத்து ரூபாய் 65 ஆயிரம் ராணுவ வீரர் என்று கூறி மோசடி ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .