விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி... டாடா குழுமம் அறிவிப்பு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியது.

விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி... டாடா குழுமம் அறிவிப்பு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியது.

இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமானம் மோதிய பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாடா குழுமம் செய்து தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் எனக் கூறியுள்ளது.