ஆலந்தா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல் குவாரியை தடை செய்ய கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

ஆலந்தா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல் குவாரியை தடை செய்ய கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல் குவாரியை தடை செய்ய கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஶ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட ஆலந்தா ஊரில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலத்தை கிரயம் செய்தும், அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து செயல்படும் கல் குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும் , காசி ராஜன் மற்றும் விஜயா ஆகிய இருவர் பெயரில் வழங்கப்பட்ட குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் , பொது மக்களை அடி ஆட்களை வைத்து மிரட்டுவதும், ஆளும் திமுக கட்சியை கையில் வைத்து கொண்டு பொது மக்களை பணம் கேட்டு மிரட்டும் போக்கை கைவிடக் கோரி ஆலந்தா  மற்றும் சவலாப்பேரி ஊர் பொதுமக்கள் கருப்பு கொடி பிடித்து   அப்பகுதியை  சேர்ந்த ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் கிராமத்தில் நடுவில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.