தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள பேக்கரியில் கேக் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அதிரடி புகார்..!

தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள பேக்கரியில் கேக் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அதிரடி புகார்..!

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் இருந்து செயல்பட்டு வரும் பிரபல  தனியார் பேக்கிரியில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கேக்கில் முட்டை ஓடுகள் மற்றும் தலைமுடி ஆகியவை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார்

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ளது பிளாக் பாரஸ்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கேக் ஷாப் உள்ளது இந்த கேக் ஷாப்பில் இன்று காலை தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த மேகலிங்கம் என்ற இளைஞர் தனது வீட்டில் உள்ள சகோதரியின் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ஆறு பிளம் கேக்குகளை வாங்கி சென்றுள்ளார் 

பின்னர் வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக கேக்கை எடுத்த போது அதில் ஒரு கேக்கிற்குள் முட்டை ஓடும் மற்றொரு கேக்கிற்குள் நீண்ட தலைமுடியும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதை தொடர்ந்து மேகலிங்கம் பேக்கரி ஷாப்பிற்கு சென்று இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார் ஆனால் நிர்வாகம் முறையாக எந்த விதி பதிலும் அளிக்கவில்லை இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேகலிங்கம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்

இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள ஒரு ஹோட்டலில் வடைக்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது பேக்கரியில் வாங்கிய கேக்கில் முட்டை ஓடு மற்றும் முடி இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

---------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE