தூத்துக்குடி: முள்ளக்காடு அருகே பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி!

தூத்துக்குடி: முள்ளக்காடு அருகே பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி!

தூத்துக்குடி: முள்ளக்காடு அருகே பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி!

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே இரு சக்கர வாகணம் மீது கார் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரேமானந்த் (வயது 45). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது இவர் குடும்பத்துடன் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் இரு சக்கர வாகணத்தில், ஆழ்வார் திருநகரிக்கு சென்றுவிட்டு இரவில் முத்தையாபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். 

பொட்டல்காடு விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த கார், அவரது இரு சக்கர வாகணம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீசார், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முத்தையாபுரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.