தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் ஏப்ரல் 7ஆம் தேதி மூடல்!

தூத்துக்குடியில் வருகிற 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 2-வது ரயில்வே கேட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் ஏப்ரல் 7ஆம் தேதி மூடல்!

தூத்துக்குடியில் வருகிற 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 2-வது ரயில்வே கேட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை-தூத்துக்குடி இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பகுதி பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையம் வரையிலான பணிகள் நடந்து வருகிறது. வருகிற 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 2-ம் கேட் பகுதியில் ரயில் பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதனால் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 2-வது ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே முதுநிலை மேலாளர் தங்கவேலு அறிவித்து உள்ளார்.