வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை கொள்ளை: தூத்துக்குடியில் துணிகரம்!!

வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை கொள்ளை: தூத்துக்குடியில் துணிகரம்!!

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அருகில் உள்ள அய்யயாசாமி காலனியைச் சேர்ந்தவர் அசரியா மனைவி எஸ்தர் (52). அசரியா இறந்து விட்டார். எஸ்தர் தனது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி கோயமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு அனைவரும் கோயமுத்தூர் சென்று விட்டனர். இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 36 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. 

இதன் மதிப்பு 13 லட்சம் ஆகும். இதுகுறித்து எஸ்தர் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் சென்று தடயங்களை பதிவு செய்தனர். இதில் 3 பேர் கைரேகை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.