அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு அக்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு அக்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு அக்.11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் அக்.11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக மனுதாரர்களுடன் இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் அமலாக்க துறையின் மனு மீது இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் அவரது மகன்கள் ஆனந்த பத்மநாபன், ஆனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சகோதரர்கள் சிவானந்தன், சண்முகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கறிஞர் சேது ஆகியோர் ஆஜரானார்கள். அமலாக்கத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் இ-பைலிங் முறையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததை தொடர்ந்து இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் அக்.11ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.