குடும்பத் தகராறில் தீக்குளித்த இளம்பெண் பலி : சார் ஆட்சியர் விசாரணை!
இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி அருகே இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி பேச்சியம்மாள் (22), இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனையடைந்த பேச்சியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்துள்ளார். பேச்சியம்மாள் திருமணம் ஆன 2 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி சார் ஆட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்