தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் மொத்தம் 16014 பயனாளிகளுக்கு ரூ.47கோடியே 94லட்சத்து 19ஆயிரத்து 561 மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில், அதாவது, தூத்துக்குடி வட்டத்தில் 244 பயனாளிகளுக்கு ரூ.75,80,350 மதிப்பிலும், திருச்செந்தூர் வட்டத்தில் 1434 பயனாளிகளுக்கு ரூ.7,77,07,739 மதிப்பிலும், திருவைகுண்டம் வட்டத்தில் 130 பயனாளிகளுக்கு ரூ.40,33,600 மதிப்பிலும், சாத்தான்குளம் வட்டத்தில் 105 பயனாளிகளுக்கு ரூ.5,11,89,696 மதிப்பிலும், ஏரல் வட்டத்தில் 193 பயனாளிகளுக்கு ரூ.88,03,260 மதிப்பிலும், 

விளாத்திகுளம் வட்டத்தில் 8492 பயனாளிகளுக்கு ரூ.15,36,48,009 மதிப்பிலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 1411 பயனாளிகளுக்கு ரூ.5,81,332 மதிப்பிலும், கோவில்பட்டி வட்டத்தில் 1712 பயனாளிகளுக்கு ரூ.11,60,25,619 மதிப்பிலும், எட்டயபுரம் வட்டத்தில் 443 பயனாளிகளுக்கு ரூ.1,91,37,60 மதிப்பிலும், கயத்தார் வட்டத்தில் 1850 பயனாளிகளுக்கு ரூ.5,98,49,956 மதிப்பிலும் என மொத்தம் 10 வட்டத்தில் 16014 பயனாளிகளுக்கு ரூ.47,94,19,561 மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.