மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு உத்தரவு : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மதுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் மேயர் பேசியதாவது "மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் நீங்கள் பிளாஸ்டிக் பை, குப்பைகளை பக்கிள் ஓடைகளில் போடாதீர்கள். இதனால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.
16, 17, 18 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி 90% முடிந்துவிட்டது. மீதமுள்ள 10% பணிகள் விரைவில் முடிக்கப்படும். ரோடுகளில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது இதுவரை 50 மாடுகள் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கால்நடைகள் ரோடுகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்
முகாமில் மாநகராட்சி உதவி ஆணையர் ரங்கநாதன், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கனகராஜ், ராமர் ,விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜேஸ்பர், பகுதி செயலாளர் பிரபாகரன் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.