தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை(ஜனவரி 20) மின்தடை அறிவிப்பு..!

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை(ஜனவரி 20) மின்தடை அறிவிப்பு..!

தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை  (ஜன.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,  110/22 கே.வி நகர் தூத்துக்குடி துணை மின்  நிலையத்தில் நாளை (ஜன.20) செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட்,2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம்  தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு,    சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு,  மீனாட்சிபுரம், வி.இ.ரோடு,  பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம்,ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார் புரம்,எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம், முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கார் நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, 

போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர்,  பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது  என  செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.