முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாசியம் பறிமுதல் : போலீஸ் விசாரணை!!

முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாசியம் பறிமுதல் : போலீஸ் விசாரணை!!

முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாசியம் பறிமுதல் : போலீஸ் விசாரணை!!

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு அருகே உள்ள தனியார் உப்பு குடோனில்  சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த  சுமார் 150 டன் பொட்டாசியம், லாரி, எடை மிஷன், தையல் இயந்திரம் ஆகியவற்றை  போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தூத்துக்குடி மாவட்டம், முள்ளகாடு அருகே உள்ள தனியார் உப்பு குடோனில் சட்ட விரோதமாக பொட்டாசியம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாக    முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் சுந்தர், தலைமை காவலர் அருணாச்சலம், முத்தையாபுரம் தனிப்பிரிவு காவலர் ஜான்சன்,  தெர்மல் நகர் தனிப்பிரிவு காவலர் செல்வின் ராஜ், ஆகியோர் நேரில் சென்று பார்த்த போது உப்பு குடோனில் சட்டவிரோதமாக பொட்டாசியம்  பதுக்கி வைக்கப்பட்டு கடத்த இருப்பது தெரியவந்தது. 

உடனடி மேற்படி போலீசார் கடத்தல் நடைபெற்று கொண்டிருந்த குடோனை சுற்றி வளைத்து கடத்தலுக்கு பயன்படுத்த பட்ட லாரி, எடை மிஷன், மற்றும் சுமார் 150 டன் பொட்டாசியம் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த பொட்டாசியத்தின் மதிப்பு சுமார் ₹.1 கோடி என கூறப்படுகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 

மேற்படி பொட்டாசியம் ரஷியாவில் இருந்து வந்த கப்பலில்  இருந்து இறக்குமதி செய்யப்பட்டு லாரி மூலம் குடோனில் வைத்து 50 கிலோ சாக்கு மூட்டைகளில் வைத்து களக்காடு பகுதிக்கு அனுப்பி வைக்க படுவதாக கூறப்படுகிறது.

 மேலும், இது தொடர்பாக கடத்திலில் ஈடுபட்ட முத்தையா புரம் அய்யங்கோவில் தெரு பகுதியை சேர்ந்த தவசி முத்து என்பவரது மகன் மாதவன் (35), பாலபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் மதியழகன் (55),  வல்லநாடு பகுதியை சேர்ந்த அருணாசலம் மகன் கொம்பையா (35) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கிய கடத்தல் குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த முத்து என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.