பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி : ஆசிரியர் திட்டியதாக புகார்

திருச்செந்தூரில் ஆசிரியர் திட்டியதால், பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் செந்தில் குமரன் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என்பதால் ஆசிரியர் திட்டியதால் திட்டினாராம்
மேலும், படிப்பு வரவில்லை என்றால் செத்துபோக வேண்டியதுதானே என்று கூறினாராம். இதில் மனமுடைந்த மாணவன் பள்ளி கட்டடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.