தூத்துக்குடியில் கல்லூரி மாணவனுக்கு கத்திக்குத்து !

தூத்துக்குடியில் செல்போன் கேமில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது நண்பரிடம் செல்போன் கேமுக்கான ஐடியை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் அந்த ஐடியை தனது மற்ற நண்பர்களுக்கும் கொடுத்தாராம். இதனால் ஜூன் 13ம்தேதி அப்பகுதியில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த மேலஅலங்காரதட்டு லாசர்நகர் பகுதியைச் சேர்ந்த போவாஸ்(எ) நாகராஜன் மகன் ஷியாம்டேனியல்(22), 18 வயது சிறுவன் ஒருவன் ஆகியோர் சேர்ந்து கல்லூரி மாணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் காயமைடந்த கல்லூரி மாணவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் எஸ்ஐ ராஜாமணி வழக்குப்பதிந்து ஷியாம்டேனியல் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.