சிவன் கோவில் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

தூத்துக்குடியில் சிவன் கோவில் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சிவன் கோவில் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

தூத்துக்குடியில் சிவன் கோவில் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

 தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 33). இவர் தூத்துக்குடி சிவன் கோவில் அலுவலகத்துக்கு சென்று திருமண சான்று குறித்து கேட்டாராம். அப்போது அங்கு இருந்த ஊழியர் சுப்பையா என்பவருக்கும், பிரேம்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. 

இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார், சுப்பையாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.