தூத்துக்குடி தொகுதி 2026ல் அதிமுகவுக்கே? “வான்கோழி மயிலாக முடியுமா?” – விஜய்க்கு தூத்துக்குடியில் இருந்து கடும் பதில்..!

தூத்துக்குடியில் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அலுவலக திறப்பு விழாவில் சி.த. செல்லப்பாண்டியன் 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அறிவிப்பு. விஜய்க்கு கடும் பதில், திமுக மீது குற்றச்சாட்டு.

தூத்துக்குடி தொகுதி 2026ல் அதிமுகவுக்கே? “வான்கோழி மயிலாக முடியுமா?” – விஜய்க்கு தூத்துக்குடியில் இருந்து கடும் பதில்..!

தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அலுவலக திறப்பு விழா அரசியல் உற்சாகத்துடன் நடைபெற்றது. மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

???? மீனவர் பிரச்சனை குறித்து கடும் விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டம் மீனவர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என குறிப்பிடும் அவர்,

“திமுக ஆட்சியில் துண்டில் வளைவு (Breakwater) பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள நிதி எங்கு சென்றது என்பது தெளிவில்லை. இதனால் படகுகள் சேதமடைந்து மீனவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்,” என்றார்.

“சொல்வதை செய்வோம் என்று கூறிய திமுக, சொன்னதையும் செய்யவில்லை; செய்ததையும் சொல்லவில்லை” என அவர் குற்றஞ்சாட்டினார்.

???? 2026-ல் தூத்துக்குடி தொகுதி யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

2026 தேர்தலில் அதிமுகவே போட்டியிடுமா என்ற கேள்விக்கு,

“எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆசீர்வாதத்துடன், அதிமுக மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடும்” என அவர் பதிலளித்தார்.

???? விஜய்க்கு கடும் பதில்

தவெக தலைவர் விஜய், “அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாவை மறந்துவிட்டது” என கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர்,

“விஜய் அவரையே அவர் மறந்துவிடுவார். மேடைக்கு மேடை மாற்றி பேசுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி இருக்கும் வரை அதிமுகவுக்கு எந்த இறப்பும் இல்லை” என்றார்.

மேலும்,

“வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை அடிப்பதால் மக்கள் அவரை அரசியல்வாதியாக ஏற்க மாட்டார்கள். நடிகராகவே பார்க்கின்றனர்,” எனவும் விமர்சித்தார்.