வைகாசி மாத பெளா்ணமி: சதுரகிரி செல்ல மே 20 முதல் 5 நாள்களுக்கு அனுமதி

வைகாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.