நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை திருச்செந்தூர் இடையே மார்ச் 20ஆம் தேதி முதல் 25 நாட்கள் 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணி காரணமாக வருகிற 20.03.2025 முதல் 13.04.2025 வரை 25 நாட்கள் திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 5004 மற்றும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 5003 ஆகிய 2 ரயில்களும் 25 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.