நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடுபவரா நீங்கள்... அப்போ கண்டிப்பா இதை படிங்க முதல்ல...!

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. நெய் மணக்கும் கத்திரிக்காய்…” என்ற திரைப்படப் பாடல், நெய் கத்திரிக்காயோடு நின்றுவிட்டாலும், நெய்ச்சோறு, நெய் தோசை, நெய் மைசூர்பாக், நெய் லட்டு என என்னென்னவோ நெய் பதார்த்தங்கள் உண்டு.

நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடுபவரா நீங்கள்... அப்போ கண்டிப்பா இதை படிங்க முதல்ல...!

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. நெய் மணக்கும் கத்திரிக்காய்…” என்ற திரைப்படப் பாடல், நெய் கத்திரிக்காயோடு நின்றுவிட்டாலும், நெய்ச்சோறு, நெய் தோசை, நெய் மைசூர்பாக், நெய் லட்டு என என்னென்னவோ நெய் பதார்த்தங்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெய் நமது உணவில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாது, நெய் இறை வழிபாட்டிலும், வீட்டு விசேச நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், வழக்கம் போல் கிடைக்கின்ற உறுதியற்ற தகவல்களுக்கு சற்று முக்கியத்துவம் கொடுத்து, திருப்தியற்ற மனநிலையுடனேயே, நாம் நெய்யை வாங்கி பயன்படுத்துகின்றோம் என்றால், அது மிகையல்ல. அதுமட்டுமில்லாது, நெய் என்றால் என்ன, எப்படி வீட்டில் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ள விருப்பமும் சற்று குறைவாகவே உள்ளது. எனவே, நெய்யின் பண்புகள், உணவு நெய்யில் உள்ள கலப்பட விவகாரங்கள் மற்றும் தீப நெய் என்ற பெயரில், கடவுளுக்கும் கலப்பட தீபம் ஏற்றும் நிலை குறித்து இன்று முதல் பார்க்கலாம்.

 

1. நெய் என்பது பால் மற்றும் அதிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெயிலிருந்து (Milk & Butter) மட்டுமே எடுக்கப்படும் பொருளாகும். அதாவது, தண்ணீர் மற்றும் கொழுப்பற்ற திடச்சத்துகளை நீக்கிய பின்னர் கிடைக்கும் கொழுப்புச்சத்து (>99% Fat) நிறைந்த பால் பொருள்தான் நெய் ஆகும்.

2. நெய்யில் வைட்டமின்-ஏ மற்றும் இ மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் குறிப்பிட்ட அளவு உள்ளது.

3. ஒரு மேஜைக்கரண்டி (15 கிராம்) நெய்யில் 130 கிலோ கலோரிஸ் உள்ளதால், தினம் 2-3 தேக்கரண்டி மட்டும் நெய் சேர்த்தல் நலம். உணவு எண்ணெய் குறைவாக எடுத்தால், நெய்யை சற்று அதிகரிக்கலாம்.

4. தாவர எண்ணெய் வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்டதாகச் சொன்னால், அது நெய் கிடையாது. நெய் என்பது விலங்கு பாலிலிருந்து (only from Animal Milk) மட்டுமே தயாரிக்கப்படுவதாகும். வீகன் நெய் (Vegan Ghee)  என்பதும் நெய் கிடையாது. அது தவறான மார்க்கெட்டிங் யுக்தி. (FSSAI தற்பொழுது அதனை ஒழுங்குபடுத்த ஆரம்பித்துள்ளது)

5. இறக்குமதி செய்யப்பட்ட நெய்யாக இருப்பின் அக்மார்க் முத்திரை அவசியம்.

6. நெய்யுடன் எந்தவொரு உணவுக் கூடுதல் சேர்மங்களைச் (Food Additives) சேர்க்கவும், பால் தவிர மற்ற எவற்றிலிருந்தும் பெறப்பட்ட கொழுப்பு உள்ளிட்ட எவ்விதப் பொருட்களை கலப்பதற்கும் அனுமதியில்லை.

7. நெய்யை பாதுகாக்க சிறந்த கொள்கலன் கண்ணாடி பாட்டிலாகும். அதிலும் குறிப்பாக கலர் கண்ணாடி (Dark Colour Bottles) பாட்டில்கள் மிகச் சிறந்தது. கண்ணாடி பாட்டில் இல்லையென்றால், உணவுத் தர ப்ளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தலாம்.

8. நெய் உள்ள பாட்டிலை காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இல்லையெனில், நெய் சீக்கரமாக கெட்டுவிட வாய்ப்புள்ளது. அதுபோல, நெய்யை அதிக வெளிச்சம் இல்லாத, ஈரப்பதம் இல்லாத, வெப்பம் இல்லாத சற்று குளிர்ந்த பகுதியில் வைத்திருக்க வேண்டும்.

9. நீண்ட நாட்களுக்கு நெய்யை இருப்பு வைக்க உலோகக் கொள்கலன்கள் ஏற்றதில்லை.

10. நெய்யைத் திறந்த நிலையில் வைத்திருக்கக்கூடாது.

11. நெய் பாட்டிலில் ஈரமான கரண்டியைவிட்டு எடுக்கக்கூடாது. அப்படி, ஈரமான கரண்டி பயன்படுத்தினால், நெய் சீக்கிரம் கெட்டுவிடும்.

12. நெய்யை பாட்டிலில் இருந்து எடுக்க கண்ணாடி அல்லது உலோகக் கரண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

13. நெய் பாட்டிலினுள் கைவிட்டு நெய்யை எடுக்கக்கூடாது. மீறினால், நெய் எளிதில் கெட்டுவிடும்.

14. பாதுகாப்பான சூழலில் இருப்பு வைக்கப்பட்ட நெய்யில், கருப்பு புள்ளிகள் தென்பட்டால், ஒரு சுத்தமான பாத்திரத்தில் கொட்டி உருக்க வேண்டும். உருக்கிய பின்னர் வடிகட்டி, மற்றொரு சுத்தமான மற்றும் உலர்ந்த பாட்டிலில் ஊற்றி, பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும். நாம் பாதுகாப்பற்ற வகையில் நெய்யைக் கையாளுவதால், வரக்கூடிய அழுக்குத் துகள்கள் தான் அந்த கருப்பு புள்ளிகள்.