தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது : 810 கிலோ புகையிலை ஒரு லாரி மற்றும் 2 இரண்டு சக்கரவாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது : 810 கிலோ புகையிலை ஒரு லாரி மற்றும் 2 இரண்டு சக்கரவாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது : 810 கிலோ புகையிலை ஒரு லாரி மற்றும் 2 இரண்டு சக்கரவாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ் பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர், இந்நிலையில், தூத்துக்குடி நகர தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், முத்தையாபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு உள்ளிட்ட போலீசார்  முத்தையாபுரம் பல்க் பஜார் பிள்ளையார் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அவர் குலையன்கரிசலை சேர்ந்த விக்னேஷ்( 24 )என்பதும் அவர் விற்பனைக்கு புகையிலை கொண்டு செல்ல இருப்பதும் தெரிய வந்தது,இதனைத் தொடர்ந்து விக்னேசை கைது செய்த போலீசார், புகையிலையை  பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர், 

அதில் லாரி மூலம் புகையிலை பொருட்களை கொண்டு வந்து தூத்துக்குடி பகுதியில்  விற்பனைக்காக அதனை கொண்டு சென்ற மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் மகன் கணேசன் (வயது 25), கள்ளக்குறிச்சி மாவட்டம் முனுசேகர் மகன் மணிவேல்(24) தூத்துக்குடி மாவட்டம்  குலையன்கரிசலை சேர்ந்த தங்கபாண்டி மகன் மாரி ராமர் (45), ஆகியோரையும்  கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 810 கிலோ புகையிலை பொருட்கள், இருசக்கர வாகனம் மற்றும் லாரி, ஆகியவற்றை நேற்று பறிமுதல் செய்தனர்.