காரில் பதுக்கிய 56 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - வாலிபர் கைது!
சாத்தான்குளம் அருகே காரில் பதுக்கி வைத்திருந்த 56.5 கிலோ புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன், உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டு சட்டவிரோத கும்பலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் சாத்தான்குளம் அருகேயுள்ள தோ்க்கன்குளம் கிராமத்தில் கல்குவாரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற காரில் தனிப்படை போலீசாா் சோதனை நடத்தினா். இதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக தோ்க்கன்குளத்தை சோ்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (25) என்பவரை கைது செய்தனா். காரில் பதுக்கி வைத்திருந்த மொத்தம் 56.5 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.1.53 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.