புதிய தெருவிளக்கு அமைத்த தர சிபிஎம் சார்பில் மேயருக்கு கோரிக்கை!!

புதிய தெருவிளக்கு அமைத்த தர சிபிஎம் சார்பில் மேயருக்கு கோரிக்கை!!
தூத்துக்குடி மாநகராட்சி 17வது வார்டு உட்பட பால்பாண்டி நகர் 1வது தெரு மெயின் 3 குறுக்கு தெருக்கள் உள்ளது. இந்த தெருக்களில் தெரு விளக்கு இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இந்த தெருக்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு வாழும் நிலை தான் உள்ளனர். எனவே இந்த பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைத்து தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன் என சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.