தூத்துக்குடியில் ஜூன் 15 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

தூத்துக்குடியில் ஜூன் 15 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

கீழவல்லநாடு உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தூத்துக்குடி ஊரக மின்விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

கீழவல்லநாடு உபமின் நிலையத்தில் நாளை (ஜூன் 15, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வல்லநாடு உபமின் நிலையம் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கலியாவூர் தலைமை நீரேற்றும் நிலையம், கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் திருவேங்கடநாதபுரம் ஆகிய இடங்களுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 காசிலிங்கபுரத்தில் மின்தடை 

காசிலிங்கபுரம், வடக்கு காரச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற மின்விநியோக செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர்ப்புற கோட்டம், கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 15, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடக்குகாரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவாலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.தளவாய்புரம், ராமசாமிபுரம்புதூர், கொம்புகாரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பருப்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப்தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.