தூத்துக்குடியில் உப்பளத்தில் மின் மோட்டார் திருடியவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு!!

தூத்துக்குடியில் உப்பளத்தில் மின் மோட்டார் திருடியவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு!!

தூத்துக்குடி விவேகானந்தநகர் பகுதியில் உள்ள உப்பளத்தில் மின் மோட்டாரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி தெற்குசோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுடலை(55). இவர் விவேகானந்தநகர் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான உப்பளத்தை வாடகைக்கு எடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அதில் உப்பள தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜூன் 11ம்தேதி காலையில் வழக்கம் போல் தனது உப்பளத்துக்கு சென்றார். பின்னர் அவர் ஜூன் 12ம்தேதி காலையில் உப்பளத்துக்கு சென்றபோது அங்கிருந்த தண்ணீர் பம்புக்கான ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டார் ஒன்று திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சுடலை அளித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் எஸ்ஐ ராஜாமணி வழக்குப்பதிந்து, மின் மோட்டாரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.