தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். கடந்த 22ம் தேதி அவர் சோரீஸ்புரம் பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read... தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் மேலும் 2பேர் நீதிமன்றத்தில் சரண்!

இதனிடையே வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் ஆறுமுகநேரி சின்னதோப்பு கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (25), நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் கீழகடையம் காமராஜ் மகன் ராஜரத்தினம் (25), திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன் (30) ஆகிய 3பேர் மதுரை நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி சரண் அடைந்தனர். 

இந்நிலையில், மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்த 3பேரையும் போலீசார் இன்று தூத்துக்குடி பிசிஆர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  அவர்கள் 3பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் மார்ச் 4ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

வாட்ஸ் ஆப் குரூப்பில் இனைய... 

https://chat.whatsapp.com/GH6dUyqDwutJ9WalcWvsDN