எட்டயபுரம் நகைக்கடை கொள்ளை வழக்கில் இறைச்சிகடை தொழிலாளி கைது!

எட்டயபுரம் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.

எட்டயபுரம் நகைக்கடை கொள்ளை வழக்கில் இறைச்சிகடை தொழிலாளி கைது!

எட்டயபுரம் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2பேரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (38). இவர் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த கடந்த 14ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று 7 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றார். இதுகுறித்து குறித்து அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த திருட்டு சம்பவம் குறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை தொழிலாளி அருணாச்சலம் (48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.