தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : மேயரிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மேயரிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகர் பகுதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பிரதீப் ஜேசுதாஸ் சாமுவேல் உள்ளிட்டோர் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சி தேவர் புரம் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து கடைகள் கட்டப்பட்டு வருகிறது. உடனடியாக அந்த ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். சாலை குறுகிய அளவில் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பள்ளி மாணவிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதுபோல விஇ ரோடு, சி.வ. பள்ளி சுவற்றின் அருகில் சுமார் 3000 அடி நீளத்துக்கு மாநகராட்சி பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இதனால் சண்முகபுரம் பகுதியில் உள்ள மக்கள் பேருந்து நிலையத்துக்கு விரைவாக வந்துவிடலாம். எனவே, இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.