தூத்துக்குடியில் பிப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோட்டாட்சியர் தகவல்!

தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 18ஆம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கோட்டாட்சியர் பிரபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் (பீச் ரோடு பழைய துறைமுகம் எதிரில்) வைத்து நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.