2026இல் திமுக ஆட்சி இருக்குமா, இல்லையா என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் கையில் தான் உள்ளது : தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பேட்டி..!

2026இல்  திமுக ஆட்சி இருக்குமா, இல்லையா என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் கையில் தான் உள்ளது : தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பேட்டி..!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட 14-வது மாநாடு சனிக்கிழமை  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. 

இம்மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், மாவட்ட இணைச்செயலாளர் விஜயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் பெருமாள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி  வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் மாவட்ட செயலாளர் ஜெ உமாதேவி, மாநாட்டை தூக்கி வைத்து பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.செல்லதுரை வேலை அறிக்கையையும்,  மாவட்ட பொருளாளர் எஸ்.வேல்முருகன் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். 

மாநாட்டினை வாழ்த்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இல.ராமமூர்த்தி,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு,  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஞானராஜ், தமிழ்நாடு மின் துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மகாராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் மாவட்ட பொருளாளர் சாம் டானியல் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆனந்த செல்வம், அன்னம்மாள், மாவட்ட தணிக்கையாளர்கள் வசிஷ்டர் தர்மலிங்கம், இந்திரா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். 

மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தே.முருகன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ. ஜெசி, மேனாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் என் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநாட்டினை நிறைவு செய்து மாநில துணைத்தலைவர் மு.தமிழரசன் பேசினார்.  நிறைவாக மாவட்ட இணைச்செயலாளர் மோகனா நன்றி கூறினார். 

தீர்மானங்கள் 

40 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களின் முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியமும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு காலியாக உள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்,  முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப் படுத்திட வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், ஓய்வு பெறுகின்ற சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சத்துணவு சமையல் மற்றும் உதவியாளர்களுக்கு மூன்று லட்சமும் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கியது போல் அனைத்து பள்ளி சத்துணவு மையத்திற்கு  பதிவேடுகள் பராமரிக்க பீரோ, நாற்காலி வழங்க வேண்டும்,  பனிக்காலத்தில் இறந்த சத்துணவு ஊழியர்களுக்கு பெண் வாரிசு இல்லை என்றால் அவர்களது ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களில் 30 சதவீதம் சத்துணவு ஊழியர்களுக்கு பனி மூப்பு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆ. ஜெசி கூறுகையில்.

திராவிட மடல் அரசு என்று கூறிக்கொண்டு சத்துணவு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்காமல் வெளி முகமை மூலமாக மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது, 

காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம்  வரவேற்கிறது இருந்தபோதிலும் 52 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பி காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கையாகும், இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டம் நடத்தியும் தற்போதைய அரசு திரும்பிப் பார்க்க வண்ணம்  உள்ளது. வருகின்ற மே மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் எங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுக்க கூடிய பல்வேறு திட்டங்கள் செய்யல்படுத்த உள்ளோம். 

தமிழ்நாடு அரசு ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேச்சுவார்த்தை எனக்கூறி கண் துடைப்பு  நாடகத்தை மேற்கொண்டு வருகிறது. 

நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சரண்டர் விடுப்பை  1.4.2026க்குள் வழங்கப்படும்  என கூறியுள்ளனர்.  1.4.2026இல்  திமுக ஆட்சி இருக்குமா இல்லையா என்பது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் கையில் தான் உள்ளது. 40 ஆண்டு காலமாக சத்துணவு ஊழியர்களாக பணியாற்றிய காலமுறை ஊதியம் வழங்கப்படும்   என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது பாராவண்ணம் இருப்பது சத்துணவு ஊழியர்கள்  மத்தியில் பெரும் அதிர்ப்பதியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ஊழியர் சங்க மாநாட்டில் "நான் உங்களில் ஒருவன்... பெட்டி இருக்கிறது சாவி இருக்கிறது நிதி இல்லை" என்று சொன்னார் ஆனால் நான்கு ஆண்டுகளாக நிதி திரட்டாமலா உள்ளது இந்த அரசு. இன்னும் மீதமுள்ள ஓராண்டு காலத்திற்குள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் . மேலும் எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் போராட்டத்திற்கு செல்வோம் என கூறினார்.