கத்திக்குத்தில் காயம் அடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் நயினார் மனைவி காந்திமதி (75). கடந்த 10 வருடத்திற்கு முன்பு நயினார் இறந்து விட்டதால் காந்திமதி தனியாக வசித்து வந்தார். கடந்த 13-ந்தேதி காந்திமதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரிடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த காந்திமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த பரமசிவன் மகன் சங்கர நயினார் (22), ஆறுமுகநயினார் மகன் நெல்லையப்பன் (22) ஆகியோர் மூதாட்டியிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.