எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் மக்கள் கோரிக்கைகள் குறித்து பேசி விடக்கூடாது என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்வதாக திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் மக்கள் கோரிக்கைகள் குறித்து பேசி விடக்கூடாது என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்வதாக திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

*எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் மக்கள் கோரிக்கைகள் குறித்து பேசி விடக்கூடாது என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்வதாக திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு* 

முதலமைச்சர்  குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு, திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், "விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும், மதியம் 12 மணி வரை கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மக்கள் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" அவர் குற்றம்சாட்டினார்.

இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.