வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் : மத்திய பாக காவல் நிலையத்தில் ஆஜர்!
வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய பீகாரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரஷாந்த் உம்ராவ் தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

தூத்துக்குடி வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவிடம் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் வைத்து திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் விசாரணை துவக்கம்.
தூத்துக்குடி கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநில செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக வதந்தி பரப்பினார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரசாந்த் உம்ராவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தூத்துக்குடியில் இருந்து டெல்லி வரை போலீசார் சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பிரசாத் உமராவ் மனு தாக்கல் செய்தார் இதை அடுத்து மதுரை உயர் நீதிமன்றம் பிரசாந்த் உம்ராவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் தொடர்ந்து 15 நாட்கள் ஆஜராக உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பிரசாத் உம்ரா இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் பிரசாந்த் உம்ராவ் இன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி சேர்ந்த பிஜேபி வழக்கறிஞர்களுடன் பிரசாந்த் உம்ராவ் ஆஜர் ஆனார். அவரிடம் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், தூத்துக்குடி டிஎஸ்பி சத்யராஜ் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.