கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் : அடுத்தடுத்து பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்..!

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற அரைமணி நேரத்திற்குள் செண்பகா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதிலுக்கு பதில் கொலை சம்பவம் நடைபெற்றள்ளாத என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.