திருச்செந்தூர் அருகே தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் மனு!
திருச்செந்தூர் அருகே தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் மனு!

திருச்செந்தூர் அருகே உள்ள காயமொழி தேரிக்குடியிருப்பு பகுதியில் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில்,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காயாமொழி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தேரி குடியிருப்பு என்னும் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்டு குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் பஞ்சாயத்தில் இருந்து தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தன. தற்போது கடந்த 20 நாட்களாக பஞ்சாயத்தில் இருந்து குப்பைகள் ஏதும் எடுக்கவில்லை இது தொடர்பாக காயாமொழி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் பகுதி வார்டு உறுப்பினர் போன்றவர்களிடம் கேட்டதற்கு ஊராட்சி மூலம் எடுக்கப்படும் குப்பைகள் சேமித்து வைக்கும் உரக்கடங்கி இருக்கும் அரசு புறம்போக்கு இடத்தை சில தனிநபர்கள் அடைத்து வைத்து கம்பி வேலி போட்டுள்ளனர்.
குப்பை வண்டிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுத்து வருகிறார்கள், இதனால் குப்பைகள் எடுக்க முடியாத நிலை உள்ளது ஊராட்சி பயன்பாட்டிற்குரிய இடத்தினை ஊராட்சிக்கு ஒதுக்கித் தந்த பிறகுதான் குப்பைகள் எடுக்கப்படும் என்று கூறுகின்றார்கள். இதனால் தேரிக் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை சாலையோரங்களில் மக்கள் கொட்டி வருகின்றனர், சாலையோரங்களில் உள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்க வேண்டும், மேலும் தூய்மையான கிராமமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.