தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மத்திய அரசைக் கண்டித்து 20ம் தேதி ஆர்ப்பாட்டம் : தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்!!

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஜூன் 20ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி  வ.உ.சி துறைமுகத்தில் மத்திய அரசைக் கண்டித்து 20ம் தேதி ஆர்ப்பாட்டம் : தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்!!

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஜூன் 20ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாட்டின் அனைத்து பெரிய துறைமுகங்களான கொல்கத்தா, மும்பை, சென்னை, கொச்சி, பாரதீப், காண்ட்லா, விசாகப்பட்டினம், கொச்சி, நியூமங்களுர், மர்மகோவா, மும்பை ஜவகர்லால் நேரு, எண்ணூர் ஆகிய 12 பெரிய துறைமுகங்களில் செயல்படும் 5 பெரிய சம்மேளனங்களான ஹெச்எம்எஸ், ஹெச்எம்எஸ் (ஒர்க்கர்ஸ்), சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி சம்மேளனங்கள் சேர்ந்து இந்திய துறைமுகங்களில் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊதிய முரண்பாடுகளை களைதல், துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் தனியார்மய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 20 அன்று அனைத்து துறைமுகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்தான துறைமுக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஊதிய விகிதம் ஸ்டேக்னேசன் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, கடந்த 4 ஆண்டுகளுக்கான போனஸ் ஒப்பந்தம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை, மத்திய அரசு நிறைவேற்றி நிதி மசோதாவில் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாற்றி அமைக்க தடையேற்படுத்தப்படுவது, அனைத்து துறைமுகங்களையும் மத்திய பென்சன் சட்டத்திற்குள் கொண்டு வருவது, துறைமுக மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இப்போராட்ம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டம் இன்று ஜூன் 17 துறைமுக தகவல் மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறைமுக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கன்வீனர் ஆர்.ரசல் தலைமை தாங்கினார். துறைமுக ஆணையக்குழு உறுப்பினர் துறைமுகம் சத்யா முன்னலை வகித்தார். 

துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பொதுச்செயலாளர் கே.காசி, செயலாளர் ஆறுமுகநயினார்,பொருளாளர் மீனாட்சி சுந்தரேசன், போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன், ஹெச்எம்எஸ் சார்பில் தலைவர் ஆரோக்கியராஜ், செயல்தலைவர் இப்ராகிம், போர்ட் யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் ஜாண் கென்னடி, பொதுச்செயலாளர் கிளிங்டன், போர்ட் எம்பிளாயீஸ் டிரேட் யூனியன் சார்பில், தலைவர் விஜய் செயல்லையா, பொதுச்செயலாளர் கனகராஜ், நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன், ஐஎன்டியுசி சார்பில் தலைவர் கருப்பசாமி, ராஜகோபாலன், ஸ்டீபன், போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏஐடியுசி சார்பில் பாலசிங்கம், போர்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஐஎன்டியுசி சார்பில் ஆரோக்கியசாமி, பிரவீன், அண்ணா டாக் அன்ட் டிரான்ஸ்போர்ட் ஓர்ககர்ஸ் யூனியன் சார்பில் சண்முககுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனடிப்படையில் தூத்துக்குடி துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு ஜூன் 20 அன்று நடைபெறும் ஆர்பபாட்டத்தில் பெருந்திரளாக தொழிலாளர்களை பங்கேற்க செய்வது என்றும் மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 அன்று நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்து பகல்காம் தாக்குதல், இந்திய பாகிஸ்தான் மோதல் காரணமாக ஜீலை 9க்கு தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் துறைமுக தொழிலாளர்கள் என்றும் முழுமையாக பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.