ஒட்டப்பிடாரம் ஐயங்கார் பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு!

ஒட்டப்பிடாரம் ஐயங்கார் பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஒட்டப்பிடாரம் ஐயங்கார் பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு!

ஒட்டப்பிடாரம் ஐயங்கார் பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியில் அமைந்துள்ள ஐயங்கார் பேக்கரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தேங்காய்பண் வாங்கியுள்ளார். அதில் பூஞ்சைகள் இருந்துள்ளது. இது தொடர்பாக‌ கடைக்காரர்களிடம் கேட்டதற்கு முறையான பதில் ஏதும் கூறவில்லையாம். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளன்களில் பரவியது. இது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அருன் உத்தரவின்பேரில் ஒட்டப்பிடாரம் வட்டார உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பேக்கரியில் ஆய்வு செய்தனர். மேலும் மேற்கண்ட கடை,உணவு பாதுகாப்பு அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடை தொடர் கண்காணிப்பில் வைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.