தூத்துக்குடி உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை!
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையும் சந்திக்கும் உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க சிபிஎம் புறநகர் செயலாளர் பா.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையும் சந்திக்கும் உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க சிபிஎம் புறநகர் செயலாளர் பா.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் செயலாளர் பா.ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் உப்பாற்று ஓடை ரவுண்டானா சாலையை தூத்துக்குடி செல்வதற்கும் மற்ற இடங்களுக்கு செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல துறைமுகம், தெர்மல், என்டிபிஎல், ஸ்பிக் போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலைக்கு சென்று வருவதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். துறைமுகத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள் பல டன் எடையுள்ள லோடுகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. மேற்படி உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் கடந்த காலங்களில் தொடர் விபத்துகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது.
மேற்கண்ட உப்பாற்று ஓடை ரவுண்டான பகுதியில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இப்பகுதி மக்களின் சார்பிலும் உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கபட்டது. அதனை தொடர்ந்து தற்போது மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது, இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ் இதுவரையில் மின் விளக்குகள் அமைக்கபடாமல் இருப்பது வாகன ஓட்டிகளை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இரவு நேரங்களில் மேம்பாலத்தை கடக்க பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள் இதனால் சிறு சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது மேலும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களும் நடைபெற வாய்ப்பும் உள்ளது. எனவே உயிர்பலிகளும் குற்றச்சம்பவங்களும் நடைபெறும் முன்பே மாநாகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் போதிய மின்விளக்குகளை அமைத்து தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கேடடுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.