தூத்துக்குடியில் பரபரப்பு..! ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி - வாலிபர் கைது!

தூத்துக்குடியில் ஏடிஎம் சென்டரில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் பரபரப்பு..! ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி - வாலிபர் கைது!

தூத்துக்குடியில் ஏடிஎம் சென்டரில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

 

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே, போல்பேட்டை மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு அருகில் ஏடிஎம் சென்டர் உள்ளது. நேற்று இரவு ஏடிஎம் சென்டருக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர், ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் அந்த மிஷினை உடைக்க முடியவில்லை.  ஆனால் அதனை உடைக்க முடியவில்லை.

 

இதனால் அதன் அருகே இருந்த வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யக்கூடிய எந்திரத்தை உடைத்து உள்ளார். அதில் இருந்த பிரிண்டரை எடுத்து வெளியில் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.  . அதன்பிறகு அங்கு பணம் எடுப்பதற்காக வந்தவர், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிலிருந்து நம்பருக்கு போன் செய்தார். தகவல் அறிந்து வங்கியின் மேலாளர், தூத்துக்குடி மறவன்மடத்தில் வசித்து வரும் இளையபெருமான் மகன் செல்வகுமார் (39)  என்பவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏடிஎம் சென்டரில் இருந்த சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4வது தெருவை சேர்ந்த ஜோன்ஸ் ராஜ் மகன் தேவராஜ் என்ற சாம் (22) என்பவர் பிரிண்டிங் மிஷினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ஏடிஎம் மிஷினில் 30 லட்சம் மேல் பணம் இருந்துள்ளது. மிஷினை உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது