#சாத்தான்குளம்: பேய்க்குளம் பகுதியில் வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு!
#சாத்தான்குளம்: பேய்க்குளம் பகுதியில் வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு!

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் வட மாநில தொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குநர் வழிகாட்டுதலின் பேரில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட மாநில தொழிலாளர்களிடம் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது. இப்பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார், ரத்த பரிசோதகர் விமல் ஆகியோர் பேய்க்குளம் பகுதியில் தங்கியிருந்து பணிபுரியும் ஒரிசா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
அந்த ரத்த பரிசோதனையில் ஏதேனும் நோய்கள் அறிகுறிகள் தென்பட்டால் அதற்கேட்ப சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.