மது குடிக்க பணம் தரமறுத்ததால் தந்தையை கல்லால் தாக்கிய மகன் கைது!
தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தரமறுத்ததால் தந்தையை கல்லால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தரமறுத்ததால் தந்தையை கல்லால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி செல்விஜர் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்தையா (55), இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (27), தனது தந்தை முத்தையாவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் முத்தையா பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் தந்தையை செங்கலால் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த முத்தையா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் இசக்கிமுத்துவை கைது செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.