தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய சோதனை சாவடியில் தவறாக ஃபைன் போட்டதை தட்டி கேட்ட இளைஞர்.. மழுப்பிய போலீசார் - வைரலாகும் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய சோதனை சாவடியில் நம்பர் பிளேட் ஃபையினுக்கு பதிலாக ஹெல்மெட் போடவில்லையா என தவறாக ஃபைன் போட்டதை தட்டி கேட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செய்துங்கநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்ல்லைப்பகிதியாக உள்ளது. இந்நிலையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடியில் வைத்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞ்சருக்கு தவறுதலாக மாற்றி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் இது தொடர்பாக அந்த இளைஞர் மேற்படி சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ மற்றும் காவலர் ஆகிய இருவரிடமும் தனக்கு போடப்பட்டுள்ள அபராதம் குறித்து அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
"நீ இப்போ சொல்றத கேட்கலனா அதுக்கும் சேர்த்து ஃபைன் போட்ருவேன் பாத்துக்க".. உன்ன யாரு ஃபைன் கட்ட சொன்னா?.. இதுக்கு 500 ரூபாய் தான ஃபைன் நீங்க எதுக்கு மாத்தி போட்டீங்க?..என்று பேசிய வீடியோ காட்சிகள் உள்ளன.