தூத்துக்குடி அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!

தூத்துக்குடி அருகே பட்டா மாறுதலுக்காக  லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!

தூத்துக்குடி அருகே பட்டா பெயர் மாற்றுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது மனைவி பெயரில் 4.5 சென்ட் நிலம் பண்டாரம்பட்டியில் உள்ளது. அவரது மனைவி கடந்த 2022ல் இறந்து விட்டார். இதையடுத்து அந்த நிலத்தின் பட்டாவை வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றுவதற்கு சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரபாகரன் விண்ணப்பித்துள்ளார்.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (42), என்பவர் சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர் பட்டா மாறுதலுக்கு பிரபாகரனிடம் ரூ.3ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து டிஎஸ்பி பீட்டர் பால் அறிவுறுத்தலின் பேரில் விஏஓ அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஓ.ஓ., கணேச மூர்த்தியிடம் பிரபாகரன் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.