சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வலராகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வலராகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா் பி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்களாக பணியாற்ற விரும்பும் தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தின் https://districts.courts.gov.in/tn/thoothukudi என்ற இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து வரும் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தலைவா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், தூத்துக்குடி - 628 003 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த 50 நபா்கள் தோ்வு செய்யப்படுவா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தொண்டுள்ளம் கொண்ட நபா்கள், சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.