தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது: 4 பைக்குகள் மீட்பு!!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது - ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது: 4 பைக்குகள் மீட்பு!!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது - ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த சந்தானராஜ் மகன் ரமேஷ்கண்ணன் (45) என்பவர் கடந்த 08.04.2023 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தபோது மேற்படி இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

அதேபோன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜ்மோகன் (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 10.04.2023 அன்று வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது மேற்படி இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

மேலும் சாயர்புரம் செபத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் நித்தின் விக்னேஷ் (22) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 04.03.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது மேற்படி இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஹரிஹர் மகன் அஜய்குமார் விஸ்வகர்மா (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 04.04.2023 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது மேற்படி இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

மேற்படி காணாமல் போன இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் மற்றும் தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசாரான வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திரு. செந்தில்குமார், திரு. திருமணிராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கோவில்பட்டி கூசாலிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்லதுரைபாண்டியன் மகன் ராமர் (31) என்பவர் மேற்படி இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரியான ராமரை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட மொத்தம் ரூபாய் 1,80,000/- மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராமர் மீது ஏற்கனவே மத்தியபாகம் காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.