பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்ற‌ம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பலர்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 380

கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து, மாநில அளவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்களிடம் சான்றிதழ் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் , மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அ.பிரம்மசக்தி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் திருமதி.ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.