தெர்மல்நகர் சக்தி பீடத்தில் மழைவளம் வேண்டி 504 பெண்கள் பால் அபிஷேகம்!

தூத்துக்குடி தெர்மல் நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டி 504 பெண்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தெர்மல்நகர் சக்தி பீடத்தில் மழைவளம் வேண்டி 504 பெண்கள் பால் அபிஷேகம்!

தூத்துக்குடி தெர்மல் நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டி 504 பெண்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் குடியிருப்பில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அதிகாலையில் குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது. ஓம் சக்தி கொடியை உதவி செயற்பொறியாளர் பிரசாத் ஏற்றிவைத்தார். மழைவளம், விவசாயம், தொழில்வளம், மக்கள் நலமுடன் வாழவும், அனல்மின் உற்பத்தி பெருகவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. என்.டி.பி.எல் தலைமை மேலாளர்  சக்திராஜா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து உலக சமாதானம் வேண்டி கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலத்தை இளைஞர் அணி தலைவர் செல்லத்துரை துவக்கி வைத்தார். மழைவளம் வேண்டி 504 பெண்கள் பால் அபிடேகம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி ஆர்.முருகன் துவக்கிவைத்தார்.அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை செயற்பொறியாளர் ஜெகதீசன் வழங்கி தொடங்கிவைத்தார்.

விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளர் கண்ணன், பிரச்சார செயலாளர் முத்தையா, வேள்விக்குழு கிருஷ்ண நீலா, தணிக்கை வேலு, சக்திபீட நிர்வாகிகள் இசக்கியப்பன், சரவணன், செந்தில்குமார், ஜெயபால், சீனிவாசன், சுப்பிரமணியன், குற்றாலம், மந்திரம் மகளிர் அணி கீதா, ராஜேஸ்வரி, செல்வி, புவனேஸ்வரி, சரிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.