விளாத்திகுளம் அருகே குடியரசு தினத்தில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் ஒத்திவைப்பு: சமாதான கூட்டத்தில் உடன்பாடு!!
விளாத்திகுளம் அருகே குடியரசு தினத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்கம் மற்றும் வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் தெரிவிக்கபட்டது. தற்போது சமாதான கூட்டத்தின் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

விளாத்திகுளம் அருகே குடியரசு தினத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்கம் மற்றும் வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் தெரிவிக்கபட்டது. தற்போது சமாதான கூட்டத்தின் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாகுட்பட்ட கிராமங்களான சிலுவைபுரம், குஞ்சையாபுரம், மேலமாந்தை செவல், ஆற்றங்கரை தானியேல் நகர், சாலமோன்நகர், விளாத்திகுளம் சிதம்பரநகர், விருசம்பட்டி மற்றும் வேடப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் வாதிரியார் சமுதாய மக்கள் தேவேந்திர குல வேளாளர் என ஏழு சாதிகளோடு இணைத்த வாதிரியார் சாதியை நீக்கி மீண்டும் பட்டியல் இன வரிசை எண் 72-ல் அட்டவணைப்படுத்தி புது அரசாணை வழங்க கோரி 26.01.2023 அன்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டுவதாக தெரிவித்துள்ளது தொடர்பாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் இன்று சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலத் துணை வட்டாட்சியர், விளாத்திகுளம், சூரங்குடி காவல் உதவி ஆய்வாளர்கள், விளாத்திகுளம், வேம்பார், வருவாய் ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சார்ந்த வாதிரியார் சமுதாய முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாதிரியார் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் கருத்து:
வாதிரியார் சமுதாய மக்கள் தேவேந்திர குல வேளாளர் என ஏழு சாதிகளோடு இணைத்த வாதிரியார் சாதியை நீக்கி மீண்டும் பட்டியல் இன வரிசை எண் அட்டவணைப்படுத்தி புது அரசாணை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. தவறுதலாக வரிசை எண் 72-ல் உள்ள பிறப்பால் ஜாதி வாதிரியார் சமூகத்தை தவறுதலாக தேவேந்திர குல வேளாளர் என பட்டியலில் சேர்த்து விட்டனர். அதனை நீக்கி வரிசை 72-ல் வாதிரியார் என தனியாக சாதிப்பெயரை தொடர்ந்து பயன்படுத்த அரசாணை வழங்கக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், சென்னை (1), மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு (2), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், தூத்துக்குடி (3), ஆதிதிராவிடர் நல ஆணையம், சென்னை (4), மாவட்ட ஆட்சித் தலைவர், தூத்துக்குடி (5), வருவாய் வட்டாட்சியர், விளாத்திகுளம் (6) ஆகியோரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டும் நாளது தேதிவரையில் எந்த பதிலும் வராத பட்சத்தில் மேற்படி 26.01.2023 அன்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
வாதிரியார் சமுதாய மக்கள் தேவேந்திர குல வேளாளர் என ஏழு சாதிகளோடு இணைத்த வாதிரியார் சாதியை நீக்கி மீண்டும் பட்டியல் இன வரிசை எண் 72-ல் அட்டவணைப்படுத்தி புது அரசாணை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. வரிசை எண் 72-ல் உள்ள வாதிரியார் ஜாதியை தவறுதலாக சேர்த்து விட்டதனை நீக்கம் செய்ய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மூலம் தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கையினை நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், தாங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும், பொதுமக்களால் உறுதி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மூலம் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதற்கு முழு ஒத்துழைப்பு அரசு சார்பில் அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதனை தொடர்ந்து 26.01.2023 அன்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டும் போராட்டத்தை கைவிடுவதாக சமாதானக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
+++++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...