மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் மனைவி குடும்பம் நடத்த வரமறுத்தால் மாமானார் வீட்டின் முன்பு வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் மனைவி குடும்பம் நடத்த வரமறுத்தால் மாமானார் வீட்டின் முன்பு வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சிலுவைபட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் முருகன் மகள் உமையம்மாள் (21). இவருக்கும் நெல்லையைச் சேர்ந்த லாரி டிரைவரான முருகன் மகன் சண்முகம் என்ற சரவணன் (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உமையம்மாள், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அவரை விட்டுப் பிரிந்து தூத்துக்குடி மேட்டுப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில் சண்முகம் நேற்று மனைவியை அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமனாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் மன உளைச்சல் அடைந்த சண்முகம் மாமனார் வீட்டு வாசலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.